Saturday, October 4, 2014

அடர்த்தியான கூந்தல் வேண்டுமா?

இளநரை, சிறுவயதிலேயே முடி கொட்டி வழுக்கை விழுதல் போன்ற பிரச்னைகளால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பர்.
இவர்களுக்கான தீர்வு தான் வேப்பிலை குளியல், கறுகறுவென நீளமான முடி வளர வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும்.

தேவையான பொருட்கள்
* 5, 6 வேப்பிலைகள்
* கொட்டையுடன் கூடிய 4 வேப்பம்பழம்
* வேப்பங்குச்சி
வேப்பிலை, கொட்டையுடன் கூடிய 4 வேப்பம்பழத்தையும் வேப்பங்குச்சியையும் சேர்த்து சம அளவில் அரைத்து கொள்ளுங்கள்.
இந்தப் பொடியை தண்ணீரில் கலந்து தலையில் `பேக்' போடுங்கள். தலையை சிறிது நேரம் காயவிட்டு பிறகு நன்கு அலசுங்கள்.
இவ்வாறு வாரம் இருமுறை குளித்து வந்தால், தலையில் இருக்கும் ஈர்கள் மற்றும் பொடுகுகள் அழிவது மட்டுமின்றி தலைமுடியை கறுகறுவென்று வளரும். இந்தப் பொடியை சீயக்காயுடன் சேர்த்தும் உபயோகிக்கலாம்.

No comments:

Post a Comment