Thursday, September 25, 2014

பேன், தலை அரிப்பை போக்கும் வேப்பிலை

தாங்க முடியாத தலை அரிப்பால் அடிக்கடி தலைக்குள் கைவிட்டு `கிடார்' வாசிப்பவர்களுக்கும், கூந்தல் பிசுபிசுப்பால் தலையில், `குப்'பென்று அடிக்கிற வியர்வை துர்நாற்றத்தால் நொந்து போகிறவர்களுக்கு `தலை மேல் பலன்' கொடுக்கிற பேக் இது... 
வேப்பிலை தூள்- அரை டீஸ்பூன், 
கடுக்காய்த்தூள்- அரை டீஸ்பூன், 
வெந்தயத்தூள் - 2 டீஸ்பூன், 
பயத்தமாவு-2 டீஸ்பூன், 
எலுமிச்சைச்சாறு - 1டீஸ்பூன்... 

இவற்றுடன் வெந்நீரை கலந்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். தலைக்கு `பேக்' போட்டு, பத்து நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் ஒரு முறை இந்த `பேக்' போட்டுப் பாருங்கள். பிசுபிசுப்பு, வியர்வை துருநாற்றத்திலிருந்து நிரந்தரமாக விடுதலையாகி விடுவீர்கள். சீயக்காயுடன் வேப்பம்பட்டையை உலர்த்தி அரைத்தும் பயன்படுத்தலாம். தலை அரிப்பு ஓடியே போய்விடும். 

பேன் தொல்லைக்கு

வேப்பிலை-1 பிடி, 
சீயக்காய்-5, 
தோல் நீக்கிய கடுக்காய்-1, 
கொட்டை எடுத்த புங்கங்கொட்டை-3, 
செம்பருத்தி இலை-1 பிடி... 

இவற்றை இரவே தண்ணீரில் ஊறவிடுங்கள். காலையில் அரைத்து அந்த விழுதை தலையில் தேய்த்துக் குளியுங்கள். இந்த வாசனைக்கே பேன் தப்பித்து ஓடுவதுடன், உங்கள் தலை பக்கம் இனிமேல் எட்டிப் பார்க்கக்கூடப் பயப்படும்.

No comments:

Post a Comment